ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

உங்க குழந்த நகத்தையா கடிக்குது



ழைக் காலத்தை எதிர் நோக்கி, தன் பேரன் பேத்திகளுக்கு தின்னக் கொடுப்பதற் காக தட்டை, முறுக்கு போன்ற பலகாரங்களை செய்து கொண்டிருந்தாள் பாட்டி.

மழைக்காலத்தில் அரையும் குறையுமாகச் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கூடத்துக்குப் போகும் பிள்ளைகள், சாயங்காலம் வாடிப்போய் வரும்போது அவர்களுக்கு கட்டாயம் ஏதாவது சாப்பிடக் கொடுக்க வேண்டும் என்பதில் பாட்டி உறுதியாய் இருப்பாள்.

அடைமழை தொடங்கிவிட்டாலே, தவறாமல் அதற்கான நொறுக்குத் தீனிகளை அவள் கைப்படவே தயாரிக்கத் தொடங்கி விடுவாள்.

அச்சுப் பிசகாமல் அடுப்பில் ஊற்றி எடுத்து முறுக்குகளை எடுத்து டப்பாக்களுக்குள் அடுக்கிக் கொண்டிருக்கும்போது அம்புஜம் தன் 5 வயது குழந்தையுடன் வந்து அமர்ந்தாள்.

என்னடியம்மா.. ரொம்பநாளாவே ஆளையே இந்தப் பக்கம் பாக்க முடியல... என்ன பண்ணிக்கிட்டு இருக்கே.. என்று பாட்டி உபச்சாரமாகக் கேட்டு வைத்தாள்.

என்னபாட்டி பண்ணுறது.. ஓயாத வேல... அதோட இந்தக்குட்டிய மேய்க்கிறதே பெரிய வேலையா போச்சு... அதுமில்லாம இதுக்கு சும்மா சும்மா உடம்புக்கு ஏதாச்சும் வந்துடுது.. ஓயாம நகம் கடிக்கிறா பாட்டி.. நானும் எவ்வளவோ தடுத்துப் பாத்துட்டேன்.. ஆனா முடியல பாட்டி...

அதுக்கு என்ன பண்ணுறதுன்னு சொல்லு பாட்டி...

மேல மருந்து தடவுறது தற்காலிக வைத்தியம்தான்.. நிரந்தரமா அந்த பழக்கம் நிக்கணும்னா வயித்துல இருக்குற கிருமிய வெளியேத்தணும். வயித்துல கிருமி இருக்குற குழந்தைகள்தான் நகத்தக் கடிக்கும். தூங்குறப்போ அரைக்கண் மூடித் தூங்கும். முகம் எப்போதும் வாடிப்போயி வெளிறியே இருக்கும். குழந்த ஏதோ சிந்தனையிலேயே இருக்கும். பதட்டமா இருக்கும்.

இது எல்லாமே வயித்துல இருக்குற கிருமிக படுத்துற பாடுதான்.

அதனால கிருமிய வெளியேத்திட்டா குழந்த நல்லாயிடுவா கவலபடாத...

இப்ப நாஞ்சொல்றத கவனமா கேட்டுக்க

இஞ்சி -1 துண்டு,

முருங்கைப்பட்டை- 1 துண்டு

எடுத்து ரெண்டையும் இடிச்சி நல்லா சாறு எடுத்து அந்த சாறோட கொஞ்சம் வெற்றிலை சாறையும், தேனையும் அளவாக் கலந்து 10 நாளுக்கு ஒருதடவ மாதத்துல மூணு தடவை ஒரு வேளைக்கு குடு. இப்பிடி மூணு மாசம் குடுத்துக்கிட்டு வா. வயித்துல இருக்குற பூச்சியெல்லாம் தானா வெளியேறிடும்.

பாட்டி சொன்ன மருந்தைக் கேட்டுக் கொண்ட அம்புஜம், பாட்டிக்கு நன்றி சொல்லிவிட்டு அவசர அவசரமாக முருங்கை மரத்தைத் தேடி புறப்பட்டாள்.

பாட்டி வைத்தியமே பக்குவமான வைத்தியம்.

வியாழன், 3 பிப்ரவரி, 2011

தடையில்லா பயணம்

என் இனிய சகோதர, சகோதரிகளே !
நம்மை தூக்கிக்கொண்டு பறப்பதற்காக ஜனாசா ஏர் லைன்ஸ் தயாராக உள்ளது! பயணிகளே கவனமாக தயாராகுங்கள் !!!


ஏறும் இடம் (Departure ) : துணியா !
இறங்கும் இடம் (arrival) : கபர்ஸ்தான் !!.


புறப்படும் நேரம் : நம்மை படைத்த எல்லாம் வல்லாஹ் அல்லாஹ் மட்டுமே அறிந்தவன்.


கவலைபடவேண்டாம் பயண நேரமும் தேதியும் மாற்றத்திற்கு உள்ளாகாது !. விமானமும் கேன்சல் ஆகா சான்சே இல்லை!?.


Destination Air போர்ட் : டெர்மினல் 01 சொர்க்கம் ! /
டெர்மினல் 02 நரகம்!?.


இது ஒரு ட்ரான்சிட் AIR LINE ?
இந்த அதிநவீன ஏர் லயன்சின் திட்டங்களும் விபரங்களும் உலகில் எங்கும் கிடைக்காது ஆனால்
புனித திருக்குரான் மற்றும் நபிகளார் முகமது சள்ளல்லாஹுவச்சல்லாம்அவர்களின் வாழ்வின் நடைமுறையில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
இந்த அதிநவீன எரோபிளேனின் பெயர் பிரிட்டிஷ் அல்லது கல்ப் அல்லது எமிரேட்ஸ் அல்லது ஏர் இந்திய கிடையாது.
ஆனால் இதன் பெயரோ ஏர் ஜனாசா !.
இந்த விமானத்தின் கேப்டன் மலக்குல் மவுத் !!!.
இதனில் உட்காரும் இருக்கை இல்லை, வசதியாக அவரவர்களின் அமல்களுக்கு (செய்த நன்மைகளுக்கு ஏற்ப ) படுத்துக்கொண்டு மட்டும்தான் பயணிக்கலாம் !.
இதில் ரவுண்டு ட்ரிப் கிடையாது ஒன் வே ட்ரிப் மட்டும்தான் !!!.?.
இதில் கண்டிப்பாக உங்கள் உடமைகளை எடுத்து கொண்டு பயணிக்க இயலாது !,
ஆனால் நமது அமல்களை எத்துனை கிலோவாக இருந்தாலும் அனுமதி கிடைக்கும் !!.
அதற்காக ஏர்போர்ட் டாக்ஸ் கட்ட வேண்டிய பிரச்னை இல்லை மகிழ்ச்சிதானே ! ?.
இதிலே செல்வதற்கு கோட் சூட் தேவை இல்லைஒரு ஆறு முழ வெள்ளை துணி போதும் ? காசு மிச்சம்தானே !!!.
இதில் நீங்கள் பயணிக்க விசாவிற்கோ மற்றும் ஏர் டிக்கெட் எடுபதற்கோ சிரமபடதேவை இல்லை !!!! ??? காசும் விரயம் இல்லை!?.


உங்களுடை விசாவும் பயண சீட்டும் நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் இருக்கும்போதே தயாராக விட்டது. !!!.


மேலும் மகிழ்ச்சிதானே?! ஆம் உங்கள் சீட் உறுதிசெய்யப்பட்டு விட்டது (confirmed )!. ரீ கன்பாம் செய்யும் பிரச்னை இருக்காது !!!.
ஆனால் உங்களுடைய சரியான பாஸ் போர்டைவைத்துகொள்ள மறந்தும் இருந்து விடாதீர்கள் ?


உங்களுக்கு பாஸ்போர்ட் செக்கிங் உண்டு !!!.


பாஸ் போர்ட் செக்கரின் பெயர் முன்கர் மற்றும் நகீர் !!!!!!! ???.


வேறு இந்தியன் or அமெரிக்கன் or பிரிட்டிஷ் or எந்தவிதவிதமான பாஸ்போர்ட்டும் செல்லுபடியாகாது ???.


ஆனால் ஒரே ஒரு பாஸ் போர்ட் தான் செல்லு படியாகும் !!!.
ஆம் அந்த பாஸ் போர்டின் பெயர் மவுத் !!!!!!.(மரணம் )
அதிலே எல்லாருக்கும் ECR கட்டாயம் ஸ்டாம்ப் உண்டு.
எமிக்ரேசன் கிளியரன்சுக்கு மூன்று கேள்விகளை நமது பாஸ்போர்ட் எமிக்ரேசன் ஆபிசர் மதிற்பிக்குரிய
முன்கர் மற்றும் நகீர் அவர்கள் கேட்பார்கள்.


அதை சரியாக கூறிவிட்டால் உங்கள் ட்ரான்சிட் லவுஞ்சில் சுகமாக ஓய்வு எடுக்கலாம் எந்த விதமான தொல்லையும் இருக்காது!!!.
ஆனால் சரியாக கூறாவிட்டால் உங்களுக்கு தொல்லை ஆரம்பம் ஆகிவிடும் உங்களின் ட்ரான்சிட் லவுன்ச் நரக லவுன்ச் ஆகிவிடும்???.
உஷார் !

உஷார் !
உஷார் !

உஷார் ! அந்த மூன்று கேள்விகள் !.
உன்னுடைய இறைவன் யார் ? விடை அல்லாஹ் !!!!!!.
உன்னுடைய மார்க்கம் எது ? விடை இஸ்லாம் !!!!!!!!.
உன்னுடைய நபி யார் ? விடை முகமது சல்லல்லாஹுவசல்லாம்
மறந்தும் இறந்து விடாதீர்கள் ? பதிலை சொல்ல அல்லாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் முஸ்லிமாக வாழ்ந்து மட்டுமே பதிலளிக்க் முடியும்.


சுகமான பயணத்திற்கு தயாராக இருப்போம்.


இன்ஷா அல்லாஹ் !.


நம்முடைய ஏர் ஜனாசா !. பயணம் நல்ல பயணமாக அமய துவா செய்யும்,
எங்கள் இறைவனே,எங்களுக்கு இந்த உலகத்திலும் நல்ல வாழ்க்கை தருவாயாக,மறுஉலகத்திலும்(மரணத்துக்கு பின் உள்ள வாழ்வு)நல்ல வாழ்க்கையை தருவாயாக.மேலும் நரக நெருப்பை விட்டும் பாதுகாப்பாயாக..(நன்றி.அன்போடு உங்களை...)